உதகையில் பத்திரப்பதிவு செய்ய வழக்கறிஞரிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வழக்கறிஞரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வழக்கறிஞரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

உதகையில் பத்திரப் பதிவாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று எடக்காடு பகுதியில் நிலப்பதிவு செய்ய வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது, நிலப்பதிவு செய்ய ரூ. 9 ஆயிரம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, பத்திரப் பதிவாளர் ரூ. 8 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட வழக்கறிஞர் ரவிக்குமார், இது தொடர்பாக லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை பத்திரப் பதிவாளர் ரமேஷிடம், வழக்கறிஞர் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பத்திரப் பதிவாளரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனையடுத்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...