பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் : கோவையைச் சேர்ந்த முன்னாள் கைதியின் செல்போன் உரையாடலால் பரபரப்பு

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் கைதி ரபீக் என்பவர், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பேசியிருக்கும் செல்போன் உரையாடல் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் கைதி ரபீக் என்பவர், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பேசியிருக்கும் செல்போன் உரையாடல் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வெளியே வந்தவர் ரபீக். 52 வயதான இவர், பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த கார் வியாபாரியான பிரகாஷ் ஒருவரிடம் தொழில் நிமித்தமாக ரபீக் பேசும் ஆடியோ ஓன்று வெளியாகி உள்ளது. அதில், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறுவது போல பதிவாகியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வாட்ஸ் அப் மூலம் வேகமாகப் பரவி வருகின்றது.

மேலும், அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது :- கொம்பு முளைத்தவன் வந்தாலும், என்னை ஒன்றும் பண்ண முடியாது. நாங்கள் "பிரதமர் மோடியையே கொலை செய்ய வேண்டும்" என்று முடிவு செய்துள்ளோம். நான் அத்வானிக்கு குண்டு வைத்தவன். 160 வண்டி உடைத்த வழக்குகள் உள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம், தடா போன்ற எல்லா வழக்குகளையும் பார்த்துள்ளோம், எனக் கூறியுள்ளார்.

இந்த வாட்ஸ் அப் ஆடியோ குறித்து கோவை மாநகர போலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக விசாரிக்க கோவை மாநகர போலிசார் ரபீக்கை தேடிய போது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா நேரடியாக இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், பிரதமர் குறித்து பேசியது தொடர்பாக கோவையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் ரபீக்கிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ரபீக்கிற்கு சம்மன் அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...