கோவையில் உணவு பாதுகாப்பு துறை சார்ப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கண்காட்சி

கோவை: உணவு பண்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் இன்று விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

கோவை: உணவு பண்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் இன்று விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை சார்ப்பில் உணவு பண்டங்களில் கலப்படம் செய்யப்படும் பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.



மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று அங்கு வந்த பொதுமக்களிடம் இது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அதை உண்பவர்களுக்கு நோய் அபாயம் ஏற்படுகிறது." என்றார்.

தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களிடம் கலப்பட பொருட்கள், கலப்படம் அல்லாத பொருட்களை கண்டறிவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் கலர் பொடிகள் உபயோகிக்கப்படும் போது எவ்வாறு நிறம் மாறி காணப்படும்? அசல் பொருட்களை எவ்வாறு கண்டறிவது? உணவு பண்டங்களின் தயாரிப்பு தேதி காலாவதி உள்ளிட்டவை கண்டறிவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.



மாவட்ட அறிவியல் கழகம் சார்ப்பில் அமைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை மையமும் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதில், பல்வேறு வகையான புத்தங்கள் இடம் பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட புத்தகங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...