நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சி தொடக்கம்

கோவை: கோவையில் நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவையில் நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு துறைகளில் பழமையான துறையாகக் கருதப்படும் நிலஅளவை பதிவேடு துறை கடந்த 1858-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தாண்டோடு, இத்துறை 160 ஆண்டுகளை கடந்துள்ளதை குறிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், வருவாய் அலுவலர் ரவிசந்தரன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.



நிலஅளவை துறையின் பிதாமகன் என போற்றப்படும் வில்லியம் லாம்டன், 1802-ம் ஆண்டு சென்னையில் புனித தோமையர் மலையில் நில அளவையைத் துவங்கிய நாளான ஏப்ரல் 10-ம் நாள் தேசிய நில அளவை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் புகைபடங்கள் தற்போது உபயோகப்படுத்தும் முறை உள்ளிட்ட படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.



அன்றைய சென்னை மாகாணத்தை உள்ளடக்கி இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை தலைமையிடமாகக் கொண்டு 1858-ம் ஆண்டு 18 நில அளவர்கள், 20 வரைவாளர்கள், 30 நிலஅளவை உதவியாளர்கள், 50 எழுத்தாளர்கள் கொண்டு துவங்கப்பட்ட நில அளவைத் துறை 160 ஆண்டுகளைக் கடந்துள்ளது. நில அளவைத் துறையின் ஆவணங்களை, தற்போது இணையதளம் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கும் அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...