காந்திபுரம் பாலத்திலிருந்து விழுந்த தார் 'டின்': கார்கள் சேதம்

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் டின் விழுந்ததில் கார்கள் சேதமடைந்துள்ளன.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் டின் விழுந்ததில் கார்கள் சேதமடைந்துள்ளன.



காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பார்க் கேட் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் சாலை ஆமினி பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது அடுக்கு மேம்பாலம் 100 அடி சாலையில் இருந்து ஆவராம்பாளையம் சாலை வரை கட்டப்படுகிறது. 

இந்த பாலம் பயனற்ற நிலையில் இருப்பதாகவும், கோவையின் 'சூசைட்-பாயின்ட்' என்றும் கோவை மக்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் 'டின்' ஒன்று கீழே விழுந்தது. இதனால், சாலையில் சென்ற நான்கிற்கு மேற்பட்ட கார்கள் மீது தார்கள் பூசப்பட்டு சேதமடைந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...