விவசாயி மீது தாக்குதல்: அதிகாரி மீது நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயி-யை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயி-யை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாதவர்களை வைத்து அதிகாரிகள் லாபம் பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சந்தை அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகளைக் கொண்டு லாபம் பார்ப்பதைக் கண்டித்து வெளியே கூறிய விவசாயியை சந்தை அதிகாரிகள் தாக்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில், விவசாயியைத் தாக்கிய அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "தாக்கப்பட்ட விவசாயி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகள் விவசாயி மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். உழவர் சந்தைகளில் கடைகளை அமைக்க விடமாட்டோம் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றனர். பல அதிகாரிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் சூழலில் ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் விவசாயிகள் மொத்தமாக பாதிக்கப்படுகின்றனர்." என்றார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...