கோவை, நீலகிரியில் சாலை பாதுகாப்பு வார விழா தொடக்கம்

கோவை: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இன்று கோவை மற்றும் நீலகிரியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடங்கி வைத்தார்.



கோவை: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இன்று கோவை மற்றும் நீலகிரியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி, இந்தாண்டு நீலகிரி மாவட்டம் உதகையில் சாலைப்பாதுகாப்பு விழா தொடங்கியது. முதல் நாளான இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.



இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார். மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் பகுதியைச் சென்றடைந்தது.



இதே போல், கோவையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் சாலை பாதுகாப்பு பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியானது அரசினர் பெண்கள் பலவகை தொழில்நுட்ப கல்லூரி, காந்திரபுரம் மாநகர பேருந்து நிலையம் வழியாக நேரு உள் விளையாட்டரங்கத்தினை அடைந்தது. இந்த பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஓட்டுநர்கள், ஊர்காவல் படையினர், வாகன விற்பனை முகவர்கள், புகை பரிசோதனை மைய நிறுவன உரிமையாளர்கள், தன்னார்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல்துறையின் சார்பில் 29-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.



பேரணியில் கலந்து கொண்டவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகளை ஓட்டவேண்டும், தலைக் கவசம் உயிர்க்கவசம், மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், மித வேகம் மிக நன்று ஆகிய விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பேரணியானது, அமராவதி சிலை, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, பூக்கடை வீதி வழியாக சென்று தாராபுரம் காவல்நிலையம் சென்றடைந்தது. 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...