மது போதையில் போலீசாரை தாக்கிய திருப்பூர் வாலிபர்கள் கைது

திருப்பூர் : திருப்பூரில் ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருப்பவர் அண்ணாதுரை. இவர் நேற்று காலை வழக்கம் போல செல்லம் நகர் பகுதிகளில் ரோந்து சென்றார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே காலை வேளையில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குடி மகன்களை அவரவர் வீட்டிற்குச் செல்ல வலியுறுத்தினார். 

இதனால் அங்கிருந்த வாலிபர்கள் ஆத்திரமடைந்து காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு கை முறிவு ஏற்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு செல்லம் நகர் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் , கருப்பையா உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...