ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஈரோட்டில் பா.ஜ.க பிரமுகர் கைது

ஈரோடு : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க வழக்கறிஞரை ஈரோடு ரயில்வே போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஈரோடு : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க வழக்கறிஞரை ஈரோடு ரயில்வே போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கைலேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் கேரளா மாநிலம் வர்தாவில் இருந்து சென்னை செல்வதற்காக சென்னை திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணித்துள்ளார்.



அப்போது, இவர்களுடன் வந்த 9 வயது சிறுமிக்கு அதே பெட்டியில் பயணித்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த உறவினர்கள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் அங்கு தயாராக இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் சென்னை பெசன்ட்நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பதும் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ் வழக்கறிஞரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...