கோவை: காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோவை: காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கருவேப்பிலை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதே போல், நீலகிரி மாவட்டம் உதகை பகுதியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகர் புறங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் இன்று பெய்த 1 மணி நேர கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
