கோவை குளத்தில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள்

கோவை: கோவை குமாரசாமி குளக்கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை: கோவை குமாரசாமி குளக்கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குமாரசாமி குளத்தில் இன்று இ.எஃப்.ஐ அமைப்பினர் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குளத்தின் கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.



இது குறித்து இ.எஃப்.ஐ. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சை பிரசாத் கூறுகையில், "புவி தினத்தை முன்னிட்டு இன்று குமாரசாமி குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். அப்போது, பிளாஸ்டிக் கழிவுகள், தர்மாக்கோல் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகளை அங்கிருந்து அகற்றினோம். அங்கு கொட்டப்பட்ட குப்பைகளில் பெரும்பாலானவை பூசைப் பொருட்களாக இருந்தது. இது சுற்றுச் சூழலுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் பாதிப்பினை உண்டாக்கும். மேலும், குளத்திற்கு வரும் பறவைகளையும் இது பாதிக்கும்." என்றார்.

தன்னார்வலர்கள் அகற்றிய குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...