உதகை தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள்

நீலகிரி: உதகையில் நடைபெற இருக்கும் 122-வது மலர் கண்காட்சிக்காக, அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

நீலகிரி: உதகையில் நடைபெற இருக்கும் 122-வது மலர் கண்காட்சிக்காக, அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.



நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் சுற்றுலா பயணிகளைக் கவர தோட்டக்கலைத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, வரும் மே மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் 122-வது மலர் கண்காட்சி நடை பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, பூங்காவில் பல்வேறு பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, பெட்டூனியா, சால்வியா, டேலியா உள்ளிட்ட 90 வகையான மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள், கண்காட்சியைக் காண வரும் சுற்றுலா பயணிகளின் மனதைக் கொள்ளையடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...