100 மீ ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவிலான சாதனையை முறியடித்த பஞ்சாப் வீரர்

கோவை: கோவையில் நடைபெற்று வரும் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியில், 100 மீ ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் வீரர் இந்திய அளவில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கோவை: கோவையில் நடைபெற்று வரும் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியில், 100 மீ ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் வீரர் இந்திய அளவில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 



தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. 16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 840 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 100 முதல் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என 46 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நேற்று மழை பெய்ததன் காரணமாக தொடக்க நாளில் நடைபெறவிருந்த 100 மீ ஓட்டப் பந்தயம் இன்று நடைபெற்றது. இதில், பஞ்சாபைச் சேர்ந்த குரீந்தர்வீர் சிங் 10.47 வினாடிகளில் இலக்கைக் கடந்து தேசிய அளவிலான சாதனையைப் படைத்துள்ளார். மேலும், ஆசிய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

முன்னதாக, கடந்த ஆண்ட நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான 100 மீ ஓட்டப் பந்தயத்தில் ஆசியன் யூத் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...