கருணைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட கோவில் யானை உயிரிழப்பு

சேலம் : உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

சேலம் : உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 



சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 42 வயதான பெண் யானை ராஜேஸ்வரி, பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்கக் கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறது. உணவு எதுவும் உண்ணாமல், மிகவும் கவலைக்கிடமான நிலையில், யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளித்தும் அது பயன்தரவில்லை. மேலும், யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே சென்றது.

எனவே, யானையை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மருத்துவ அறிக்கை பெற்றபின் விதிகளைப் பின்பற்றி யானையைக் கருணை கொலை செய்யலாம் எனவும் கோவில் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 



இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் யானையைத் தீவிரமாக பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை திடீரென ராஜேஸ்வரி யானை தானாகவே உயிரிழந்தது. 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...