கருணைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட கோவில் யானை உயிரிழப்பு

சேலம் : உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

சேலம் : உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 



சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 42 வயதான பெண் யானை ராஜேஸ்வரி, பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்கக் கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறது. உணவு எதுவும் உண்ணாமல், மிகவும் கவலைக்கிடமான நிலையில், யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளித்தும் அது பயன்தரவில்லை. மேலும், யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே சென்றது.

எனவே, யானையை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மருத்துவ அறிக்கை பெற்றபின் விதிகளைப் பின்பற்றி யானையைக் கருணை கொலை செய்யலாம் எனவும் கோவில் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 



இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் யானையைத் தீவிரமாக பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை திடீரென ராஜேஸ்வரி யானை தானாகவே உயிரிழந்தது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...