கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பு நடத்தும் மாரத்தான்

கோவை : உலக ஆரோக்கிய தினம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னிட்டு கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் வரும் 29-ம் தேதி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன.

கோவை : உலக ஆரோக்கிய தினம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னிட்டு கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் வரும் 29-ம் தேதி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. 



இது தொடர்பாக கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் ஆர்.டி. வினோத் ராஜ்குமார் கூறுகையில், "உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதில், சிறப்பான விஷயம் என்னவெனில், குழந்தைகளை தாக்கும் புற்றுநோயின் 70 சதவீத நோய் தாக்கத்தை குணப்படுத்த முடியும். இந்த நிலையில், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டும் வரும் 29-ம் தேதி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.



(5 கி.மீ மற்றும் 10 கி.மீ.) மரத்தான், (3 கி.மீ) வாக்கத்தான் போட்டிகளில், தங்களது உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 1,200 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பங்கேற்க வருபவர்களுக்கு ரூ. 600-ம், கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு ரூ. 500-ம், மாணவர்களுக்கு ரூ. 300-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...