அ.தி.மு.க பொதுச்செயலாளரை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய ஓ.பி.எஸ்., தரப்பு தயக்கம் : கே.சி. பழனிச்சாமி

கோவை : அ.தி.மு.க., பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை ஏற்க துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தயக்கம் காட்டி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை : அ.தி.மு.க., பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை ஏற்க துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தயக்கம் காட்டி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- அ.தி.மு.க.,வில் தற்போது இருக்கும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் செல்லாது என்ற தீர்ப்பு மே முதல் வாரத்தில் டெல்லி நீதிமன்றத்தில் வரவாய்ப்பு இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் பொதுச் செயலாளர் பதவியினை தொண்டர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை ஏற்கத் தயாராக இருக்கின்றோம் என தினகரன் தரப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து ஓ.பி.எஸ். தரப்பினர் பின்வாங்குகின்றனர். 

பொதுச் செயலாளர் பற்றிய எந்த முடிவையும் பொதுக்குழு எடுக்க முடியாது. அ.தி.மு.க., சட்ட விதிப்படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். இன்னொரு கட்சி தலைவர் சொல்லுவதை கேட்டு நடப்பவர்கள் அ.தி.மு.க., கட்சிக்கு தலைமை தாங்க முடியாது. ஒ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் பதவிகள் கிடைத்தால் போதும் என்று செயல்படுகின்றனர். 

அ.தி.மு.க.,வில் இருந்து ஏற்கனவே என்னை நீக்கியிருப்பதாக அமைச்சர் சி.வி. சண்முகம் சொல்கிறார். நீக்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் கொடுத்தால் கட்சி பணிகளில் இருந்து விலகிக் கொள்கிறேன். நிதானம் இழந்து பேசக்கூடியவர் சி.வி.சண்முகம். அ.தி.மு.க.,வை மோடி முன்னேற்றக் கழகமாக மாற்ற ஒ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய ஆட்சியில் ஸ்டாலின் அறிவிக்கப்படாத துணை முதலமைச்சரை போல செயல் படுகிறார். பா.ஜ.க.,வின் கிளை போன்று அ.தி.மு.க., செயல்படுகின்றது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டோ, தேர்தல் ஆணைய அதிகாரிகளைக் கொண்டோ நடத்த வேண்டும். இதற்கான உத்தரவுகள் நீதிமன்றம் மூலம் வரலாம், எனக் கூறினார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...