16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டி இன்று தொடக்கம் : வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா

கோவை : கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கிய 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியின், ஒரு பகுதியாக, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கோவை : கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கிய 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியின், ஒரு பகுதியாக, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 



தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று காலை துவங்கியது. 16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 840 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 100 முதல் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என 46 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.



இன்று காலை நடைபெற்ற ஜூனியர் பெண்களுக்கான பத்தாயிரம் மீட்டர் நடை போட்டியில் உத்தராகண்ட் மாநில வீராங்கனை ரோஜி பட்டேல் முதலிடத்தைப் பிடித்தார். ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரியானா வீரர் குர்பிரீத் முதலிடத்தையும், தமிழக வீரர் சஞ்சய்குமார் இரண்டாம் இடத்தையும், உத்தரபிரதேச வீரர் அஜய்குமார் பிந்த் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மகாராஷ்ட்ரா வீராங்கனை பூனம் சொனுனே முதல் இடத்தையும், குண்டு எறிதலில் உத்தரபிரதேச வீராங்கனை கிரண் பலியான் முதலிடத்தையும் பிடித்து அசத்தினர். 



மாலையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணா கல்வி குழுமங்களின் முதன்மை அதிகாரி சுந்தரராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இன்று மதியம் பெய்த மழையின் காரணமாக போட்டிகள் சிறிது நேரம் தடைபட்டது. மேலும், மைதானத்தில் தேங்கிய தண்ணீரை ஊழியர்கள் அகற்றினர். இருப்பினும், தண்ணீர் முழுமையாக அகற்றப்படாததால், முழுத் திறனை வெளிப்படுத்துவதில் சிரமமாக இருந்ததாக வீரர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...