கொளுத்தும் வெயிலில் அரசு பள்ளி சேர்க்கைக்காக அலைக்கழிக்கப்படும் பிஞ்சு குழந்தைகள்

திருப்பூர் : குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி கடும் வெயிலிலும் திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்திய சம்பவம் பெற்றோர்களை வேதனைக்குள்ளாக்கியது.

திருப்பூர் : குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி கடும் வெயிலிலும் திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்திய சம்பவம் பெற்றோர்களை வேதனைக்குள்ளாக்கியது. 

பள்ளி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைகள் தனியார் பள்ளிகளில் துவங்கிவிட்டன. அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள், கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருவதை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளி சேர்க்கையை வலியுறுத்தி திருப்பூர் கஞ்சம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியின் சார்பில் பள்ளியில் பயிலும் சின்ன குழந்தைகளைக் கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 

கொளுத்தும் வெயிலில் அரசுப் பள்ளி சேர்க்கைக்காக இளம் சிறார்களை இதுபோன்று அலைக்கழித்த சம்பவம் பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசுக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொண்டு வரும் சீரிய செயல்கள், இதுபோன்ற நிகழ்வுகளால் விமர்சனத்திற்குள்ளாகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...