திருப்பூரில் உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரசித்திபெற்ற மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரசித்திபெற்ற மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 



பல்லடம் அருகே மாதப்பூரில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நலன் வேண்டியும், மும்மாரி மழை பெய்ய வேண்டியும் வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. திருமணத்தை கோவில் பூசாரி சரவணமுத்து வெகுவிமரிசையாக நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு அபிசேகம், ஆராதனை மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாதப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "மூத்தோர்களது வாக்குப்படி காலங்காலமாக அரச- வேப்ப மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தால், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, கல்வியில் தேர்ச்சி உள்ளிட்ட பல நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். அதனைப் பின்பற்றி இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது," எனக் கூறினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...