திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரசித்திபெற்ற மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரசித்திபெற்ற மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பல்லடம் அருகே மாதப்பூரில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நலன் வேண்டியும், மும்மாரி மழை பெய்ய வேண்டியும் வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. திருமணத்தை கோவில் பூசாரி சரவணமுத்து வெகுவிமரிசையாக நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு அபிசேகம், ஆராதனை மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாதப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "மூத்தோர்களது வாக்குப்படி காலங்காலமாக அரச- வேப்ப மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தால், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, கல்வியில் தேர்ச்சி உள்ளிட்ட பல நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். அதனைப் பின்பற்றி இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது," எனக் கூறினர்.

பல்லடம் அருகே மாதப்பூரில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நலன் வேண்டியும், மும்மாரி மழை பெய்ய வேண்டியும் வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. திருமணத்தை கோவில் பூசாரி சரவணமுத்து வெகுவிமரிசையாக நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு அபிசேகம், ஆராதனை மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாதப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "மூத்தோர்களது வாக்குப்படி காலங்காலமாக அரச- வேப்ப மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தால், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, கல்வியில் தேர்ச்சி உள்ளிட்ட பல நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். அதனைப் பின்பற்றி இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது," எனக் கூறினர்.