உடலில் உறுப்புகளைப் போல வளரும் கட்டிகள்... விநோத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வருமா தனியார் மருத்துவமனைகள்..?

தருமபுரியில் உறுப்புகளைப் போல ஒரு அங்கமாக வளர்ந்த கட்டிகளை அகற்றுவதற்கு, இலவச சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் முன்வருமா..? என விநோத நோயால் அவதிப்பட்டு வருபவர் எதிர்பார்த்துள்ளார்.

தருமபுரியில் உறுப்புகளைப் போல ஒரு அங்கமாக வளர்ந்த கட்டிகளை அகற்றுவதற்கு, இலவச சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் முன்வருமா..? என விநோத நோயால் அவதிப்பட்டு வருபவர் எதிர்பார்த்துள்ளார். 



தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமமான போடாரங்காட்டைச் சேர்ந்தவர் பழனிசாமி (46). இவர், 12 வயதில் இருந்து தாடை, கழுத்தின் பின் பகுதி, கைகளின் மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் எட்டு கட்டிகள் உருவாகின. பழனிசாமி வளர வளர, உறுப்புகளைப் போல கட்டிகளும் வளரத் தொடங்கின. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மருந்து, மாத்திரைகளை மருத்துவர் கொடுத்தனர்.

சுமார் 18 கிலோ எடை வரை வளர்ந்த அந்தக் கட்டிகளால், பழனிசாமிக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டது. உடலில் கட்டிகளுடன் பயணிக்க முடியாததால், மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார். எந்தப் பணிக்கும் செல்லாத நிலையில், வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகை கேட்டு, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் பலனில்லை. மேலும், இந்த விநோத நோயின் காரணமாக பழனிசாமிக்கு திருமணமும் ஆகவில்லை. சகோதரர்கள் தயவில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தனது பாதிப்புகள் குறித்த பழனிசாமி கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம், உதவித்தொகை வழங்கா விட்டாலும் பரவாயில்லை. உடலில் உள்ள கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால், என் சொந்தக் காலிலேயே நின்று பிழைத்துக் கொள்வேன்,'' என்றார்.

மன தைரியத்துடன் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்ல துடிக்கும் பழனிசாமிக்கு அரசு தரப்பில் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கு பல்வேறு தனியார் மருத்துவமனைகள் இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வரும் நிலையில், பழனிசாமிக்கும் அதுபோன்று நிகழ்வு நிகழாத என அவரும், அவரது குடும்பத்தினரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...