ஊடக பெண்கள் குறித்து சர்ச்சை பதிவு : எஸ்.வி. சேகரை கைது செய்யக் கோரி புகார்

கோவை : ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.


கோவை : ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.



அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, தன்னிடம் பயிலும் மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான தொலைப்பேசி உரையாடல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் தொடர்பிருக்கலாம் என பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, முதல்முறையாக ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, ஒரு பெண் நிரூபர் ஒருவரின் கண்ணத்தை தொட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அந்த பெண் நிரூபரும் டுவிட்டரில் ஆளுநருக்கு எதிராக கருத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், பா.ஜ.க.வின் ஆதரவாளரும், நடிகருமான எஸ்.வி. சேகர், பெண் நிரூபரை வறுத்தெடுத்திருந்தார். மேலும், பெண் நிரூபர்களும் ஊடகத்துறையில் பாலியல் வன்கொடுமை சந்திப்பதாகவும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. 



இந்த நிலையில், ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பெண் பத்திரிகையாளரை அவதூறாக அவர்களின் கண்ணியத்தை களங்கபடுத்தும் விதமாக சமூகவலைத்தளங்களில் ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுப்படுத்தியுள்ளார். இது ஒட்டுமொத்த மக்களையும், பெண்களையும் கலங்கப்படுத்தும் விதமாக உள்ளது. ஆகவே, எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாதர் சங்கத்தினர் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எஸ்.வி. சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா கூறியதாவது :- ஊடக பெண்களை தரக்குறைவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட எஸ்.வி சேகரை, உடனடியாக கைது செய்ய வேண்டும். தொடர்ந்து, பெண்களுக்கு எதிராக பா.ஜ.க.,வினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நிலையில், எஸ்.வி. சேகர் மிக தாழ்ந்த முறையில் பெண் பத்திரிகையாளர்களை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது. ஆகவே, இவர் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...