அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை உருவாக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை உருவாக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதி நாளில் அரசியலில் பிரவேசித்த ரஜினி, முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றம் செய்து, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் மன்றத்திற்கு குக்கிராமங்கள் தோறும் கிளைகள் அமைக்கவும், அந்தக் கிளைகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கவும் அவர் மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 65,500 குக்கிராமங்களில் மன்றத்தின் கிளைகள் திறக்கப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பணி தீவிரமாக நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் 65,000 கிளைகள், ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அந்தப் பட்டியலுடன் புதிய கட்சியை அறிவிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதி நாளில் அரசியலில் பிரவேசித்த ரஜினி, முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றம் செய்து, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் மன்றத்திற்கு குக்கிராமங்கள் தோறும் கிளைகள் அமைக்கவும், அந்தக் கிளைகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கவும் அவர் மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 65,500 குக்கிராமங்களில் மன்றத்தின் கிளைகள் திறக்கப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பணி தீவிரமாக நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் 65,000 கிளைகள், ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அந்தப் பட்டியலுடன் புதிய கட்சியை அறிவிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.