சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தனது பிறந்தநாளான இன்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தனது பிறந்தநாளான இன்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மத்திய பட்ஜெட்டில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ஆந்திர அரசு, மத்திய அரசுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. தொடர்ந்து, அக்கட்சியின் எம்.பி-க்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மத்திய பா.ஜ.க அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் இந்தத் தீர்மானத்துக்கு, தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆந்திரக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி, ஆந்திராவின் பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு, பல்வேறு கட்சியினரும் ஆதரவளித்திருந்தனர். ஆனால், சந்திரபாபு நாயுடு, முழு அடைப்பினால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிப்படையும் எனக் கூறி போராட்டத்தைப் புறக்கணித்தார். இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை விஜயவாடாவில் அவரது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இன்று, சந்திரபாபு நாயுடுவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...