கோவையில் சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இன்று முதல் 2 நாள் வேலை நிறுத்தம்

கோவை: பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் உள்ள சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.


கோவை: பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் உள்ள சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.



பவுண்டரி தொழிலின் மூலப்பொருட்களான நிலக்கரி, தேனிரும்பு, இரும்புகள் ஆகியவற்றின் விலை உயர்வால் சிறுகுறு வார்ப்பட தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோவை சேரன் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி வீதம் வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மூலப்பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக வார்ப்பட ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...