வால்பாறையில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் காயம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

அக்காமலை எஸ்டேட்டில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர், முடக்கு வளைவு பாலத்தின் அருகே நிலைதடுமாறி சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிராக்டரில் பயணம் செய்த மாடசாமி (38), பக்கிராம் (32), திருமுருகன் (35), விஜயகுமார் (28), தினேஷ்குமார் (32), ராகுல் (28), காளிமுத்து (30) மற்றும் ஓட்டுநர் காளிமுத்து ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, அருகில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகே உள்ள கருமலை எஸ்டேட் தோட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தோட்ட அதிகாரிகள் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...