கோவை : தமிழகத்தில் சர்ச்சைக் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக வர முடியுமா..? என தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.
கோவை : தமிழகத்தில் சர்ச்சைக் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக வர முடியுமா..? என தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் தி.மு.க., ஈரோடு மண்டல மாநாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சனைக்காக முதலமைச்சராக இருந்த காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஒரு துரும்பை கூடத் தூக்கிப் போடவில்லை. தன்மானத்தை விட இனமானம் முக்கியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால், தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ராஜினாமா செய்யலாம் என்ற ஸ்டாலினின் யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.
பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா தன்மானமுள்ள மனிதனாக இருந்தால் போலீசார் பாதுகாப்பு இல்லாமல் வந்து பார்க்கட்டும். நீட் விலக்கு, காவிரி நதிநீர் உரிமைகளைப் பெற்று தராத தமிழக அரசு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ரூ. 46 கோடியில் நினைவு மண்டபம் கட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கல்லறையில், அரசியல் சட்டத்தை படுகொலை செய்த கொள்ளைக்காரி இங்கு உறங்குகிறாள் என எடப்பாடி பழனிசாமி எழுத வேண்டும், எனத் தெரிவித்தார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் தி.மு.க., ஈரோடு மண்டல மாநாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சனைக்காக முதலமைச்சராக இருந்த காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஒரு துரும்பை கூடத் தூக்கிப் போடவில்லை. தன்மானத்தை விட இனமானம் முக்கியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால், தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ராஜினாமா செய்யலாம் என்ற ஸ்டாலினின் யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.
பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா தன்மானமுள்ள மனிதனாக இருந்தால் போலீசார் பாதுகாப்பு இல்லாமல் வந்து பார்க்கட்டும். நீட் விலக்கு, காவிரி நதிநீர் உரிமைகளைப் பெற்று தராத தமிழக அரசு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ரூ. 46 கோடியில் நினைவு மண்டபம் கட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கல்லறையில், அரசியல் சட்டத்தை படுகொலை செய்த கொள்ளைக்காரி இங்கு உறங்குகிறாள் என எடப்பாடி பழனிசாமி எழுத வேண்டும், எனத் தெரிவித்தார்.