போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வரமுடியுமா..? எச். ராஜாவுக்கு ஆ. ராசா சவால்

கோவை : தமிழகத்தில் சர்ச்சைக் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக வர முடியுமா..? என தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

கோவை : தமிழகத்தில் சர்ச்சைக் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக வர முடியுமா..? என தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் தி.மு.க., ஈரோடு மண்டல மாநாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சனைக்காக முதலமைச்சராக இருந்த காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஒரு துரும்பை கூடத் தூக்கிப் போடவில்லை. தன்மானத்தை விட இனமானம் முக்கியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால், தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ராஜினாமா செய்யலாம் என்ற ஸ்டாலினின் யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா தன்மானமுள்ள மனிதனாக இருந்தால் போலீசார் பாதுகாப்பு இல்லாமல் வந்து பார்க்கட்டும். நீட் விலக்கு, காவிரி நதிநீர் உரிமைகளைப் பெற்று தராத தமிழக அரசு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ரூ. 46 கோடியில் நினைவு மண்டபம் கட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கல்லறையில், அரசியல் சட்டத்தை படுகொலை செய்த கொள்ளைக்காரி இங்கு உறங்குகிறாள் என எடப்பாடி பழனிசாமி எழுத வேண்டும், எனத் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...