‘லோக் ஆயுக்தா’ உடனடியாக அமைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் அரசுத் துறைகளில் நடைபெறும் ஊழல்களைக் கண்டறிந்து விசாரிக்க கடந்த 2013-ம் ஆண்டு, ‘லோக் ஆயுக்தா’ மற்றும் ‘லோக்பால்’ சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக எந்த ஒரு தனி மனிதனும் வழக்குத் தொடர முடியும். இதன் விசாரணையில், அரசியல்வாதிகளோ அல்லது அரசு அதிகாரிகளின் ஊழலோ நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்குப் பதவி பறிப்பு, சம்பள நிறுத்தம், பணிநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும். 

இந்தச் சட்டம், முதல்முதலாக மகாராஷ்டிராவில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 15 மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்தது. தற்போது, தமிழகம், தெலங்கானா, புதுச்சேரி, அருணாசலப்பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்னும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு, இன்னும் ‘லோக் ஆயுக்தா’ அமைக்காததற்கான காரணம் குறித்து அனைத்து மாநிலங்களும் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன்படி, தமிழகத்துக்கான மனுவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா தொடங்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து, வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...