பெண்களே...! : கோடையில் லெகின்ஸ் அணிய வேண்டாம்

கோவை : ஆடை அலங்காரம் என்பது நம் உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஒன்று. கலர் கலராய் ஆடைகள் வாங்குவதில் பெண்களே என்றும் முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆடைகள் நம் கால நிலைக்கு ஏற்ப மாறுபடும்.

கோவை : ஆடை அலங்காரம் என்பது நம் உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஒன்று. கலர் கலராய் ஆடைகள் வாங்குவதில் பெண்களே என்றும் முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆடைகள் நம் கால நிலைக்கு ஏற்ப மாறுபடும். பெண்களுக்கென பல்வேறு விதமான ஆடைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆனால், இந்த ஆடைகள் எல்லாம் வெயில் காலத்திற்கு உகந்ததா?



இந்த கேள்விக்கு விடை காண்பதை நாம் மறந்து விடுகிறோம். இந்த கோடைக்காலத்தில் லெகின்ஸ் உடை உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

லெகின்ஸ் உடலில் உள்ள ஈரப்பதங்களை உறிஞ்சி, வறண்டு போகும். அதனோடு, வேர்வை வெளியேறும் போது இதன் காரணமாக சிறு தடிப்புகள் உடலில் தோன்ற வாய்ப்புள்ளதாகத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 



இது குறித்து பிரியங்கா என்ற இல்லத்தரசி கூறுகையில், "நான் லெகின்ஸ் அணிவேன். எனது கால்களில் சிறு தடிப்புகள் ஏற்பட்டிருந்தன. வேறு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் அணுகிய போது, லெகின்ஸ் அணிய வேண்டாம் என்று அறிவுரை கூறினார்." என்றார்.

இது குறித்து தோல் நோய் சிகிச்சை நிபுணர், மருத்துவர் மன்வீன் கபூர் கூறுகையில், "லெகின்ஸ் அணிவது சுலபம். ஆனால், அது ஏற்படுத்தும் பிச்சினைகள் அதிகம். குறிப்பாக கோடை காலத்தில் லெகின்ஸ் அணிவதை தவிர்த்திடுங்கள். இது வேர்வை வெளியேறுவதைத் தடுக்க வல்லது. மிகவும் இறுக்கமான ஆடையாக இருக்கும் லெகின்ஸ் நம் உடலுக்குள் காற்று செல்லவதைத் தடுக்கிறது. கோடைக் காலத்தில் தளர்வான ஆடைகளே சிறந்தது." என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...