கோவை: கோவையில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வீரர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வீரர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் நாளை துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 352 வீரர்கள் மற்றும் 420 வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 16 வயது முதல் 20 வயது வரையிலான பிரிவுகளில் 44 இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ராம்நகரில் உள்ள தனியார் உணவக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மலர்விழி கூறுகையில். "வீரர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஊக்கமருந்து உள்ளிட்ட முறைகேடுகளில் வீரர்கள் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக மருத்துவ சோதனைகள் உள்ளிட்ட கண்காணிப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," எனக் கூறினார்.
