நீதிபதி லோயா மரணத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை - உச்சநீதிமன்றம்

டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரணத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரணத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, அங்கு உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து இருந்தார். அப்போது, ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட சொராபுதீன் அன்வர் ஹுசைன் சேக் என்பவர் அகமதாபாத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த போலி என்கவுண்டர் வழக்கு குஜராத் மாநிலத்தில் விசாரிக்கப்படாமல், மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரிக்கப்பட்டது. ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று வந்த அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நீதிபதி லோயா மரண வழக்கு நீதித்துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வணிக மற்றும் அரசியல் நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ளது." எனக் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...