கதுவா விவகாரம்: சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

காஷ்மீர்: கதுவா-வில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


காஷ்மீர்: கதுவா-வில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமியை, ஒரு கும்பல் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், காவல்துறை அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. செய்திகளில் பல்வேறு ஊடகங்கள் சிறுமியின் புகைப்படத்தையும் பெயரையும் வெளியிட்டன. 

18 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் புகைப்படம் அல்லது அவர்களது அடையாளங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தக்கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், சில ஊடகங்கள் சிறுமியின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டது. 

இந்த நிலையில், சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அந்த அபராதத் தொகையை காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...