முடிவுக்கு வந்தது சினிமா ஸ்ட்ரைக்

சென்னை: சினிமா சங்கத்தினர் நேற்று நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை: சினிமா சங்கத்தினர் நேற்று நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கட்டணத்தைக் குறைத்தல், கேளிக்கை வரி நீக்கம், டிக்கெட் கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங், தின்பண்டங்களின் விலை குறைப்பு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரைத் துறையினரின் கடந்த 47 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக புதிய திரைப்படங்கள் வெளியாகாத காரணத்தால் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று கூறப்பட்டது. அதை தொடர்ந்து கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கும், வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்கள், டிஜிட்டல் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புதிய படங்கள் வெளியீடு மற்றும் படப்பிடிப்பு வேலைகளைத் துவங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...