பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டி சர்ச்சையில் சிக்கிய தமிழக ஆளுநர்

சென்னை : ராஜ்பவனில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை : ராஜ்பவனில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

காவிரி விவகாரம், தமிழக பல்கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தவர்களை  நியமித்தது, பாலியல் புகாரில் கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி சிக்கியுள்ளது போன்ற சூழ்நிலைகள் நடுவே இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். 

பதவியேற்ற பின் முதல் முறையாக ஆளுநர் மாளிகையில்  இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேராசிரியரின் பாலியல் புகார் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நிர்மலா தேவி யார் என்றே தனக்கு தெரியாது என்றார். மேலும், தனக்கு கொள்ளுப் பேரன் இருப்பதாக பதிலளித்த அவர், செய்தியாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு திணறினார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் செய்தியாளர் மீண்டும் கேள்வியெழுப்ப, அந்த செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாக தட்டியுள்ளார் ஆளுநர். 



இந்த சூழலில், தனது பேத்தியிடம் நடந்து கொள்வதைப் போல் ஒரு மாநிலத்தின் ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா?  என்ற கேள்வியெழுந்துள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய இந்த சூழலில் ஆளுநர் இது போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழகத்தில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...