போலிசாரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கோவை : கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் நீரா மற்றும் கள் இறக்கிய விவசாயிகளின் தோட்டத்தில் தென்னம்மரத்தின் பாளையை வெட்டிய மதுவிலக்கு போலிசாரை கண்டித்து விவசாயிகள் இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கோவை : கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் நீரா மற்றும் கள் இறக்கிய விவசாயிகளின் தோட்டத்தில் தென்னம்மரத்தின் பாளையை வெட்டிய மதுவிலக்கு போலிசாரை கண்டித்து விவசாயிகள் இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் அருணாசலம் (57). இவர் அப்பகுதியில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இதில், அருணாசலம் நீரா மற்றும் கள் இறக்கி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென இவரது தோட்டத்திற்கு வந்த போலிசார் அத்துமீறி தென்னம் பாளையை வெட்டி பானைகளை உடைத்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

அதே போல, செந்தில் ராஜ் என்பவரின் தோட்டத்திலும் விவசாயிகளை விஷக்கள் விற்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் ஒன்றிணைந்த விவசாயிகள், அத்துமீறி மதுவிலக்கு காவல்துறையினர் மரத்தின் பாளையை வெட்டியதை கண்டித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து விவசாயி அர்ஜூனன் கூறியதாவது, எங்கள் தோட்டத்தில் நீரா பாணம் மற்றும் கள் இறக்கினோம்.ஆனால் போலிசார் ஊமத்தம் இலையை கள்ளில் கலந்து விஷக்கள் விற்பதாகச் சொல்லி மிரட்டினார். அதே போல குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டியதாகவும் இதனால் ஒன்றிணைந்து விவசாயிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தை முற்றுகை இட்டுள்ளோம் என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...