பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிடத் திட்டம்

பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 

குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம்., மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தியது- பின்னர், நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், "செயற்கையாக உருவாகி உள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும், தேவைக்கு அதிகமான அளவு பணம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பொருளாதார விவகாரத்துறை செயலர் எஸ் சி கார்க் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில். "இனிவரும் நாட்களில் ரூ. 500 நோட்டு, ஒரு நாளைக்கு 5 மடங்காக, ரூ. 2,500 கோடிக்கு அச்சிடப்படும்" எனக் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஏ.டி.எம்.,களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ. 500 நோட்டுக்கள் அதிகமாக அச்சடிப்பதன் மூலம் மாத சப்ளை ரூ. 70,000 - ரூ. 75,000 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...