தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து கிறிஸ்தவ பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை: தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிறிஸ்தவ சிறுபான்மை பேரவையினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 2 ஆண்டுகளாக அதிகரிக்கும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கிறிஸ்தவ அமைப்பினர் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், சிறுமி ஆசிபா கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய ஜனநாயக கட்சி, வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...