மேட்டுப்பாளையத்தில் பலாப்பழங்களுக்காக அரசு பண்ணையை முற்றுகையிடும் காட்டு யானைகள்

மேட்டுப்பாளையம்: பலாப்பழங்களை தேடி கல்லார் அரசு பழப் பண்ணையை காட்டு யானைகள் முற்றுகையிட்டு மரங்களை சாய்க்க துவங்கியுள்ளதால் மரங்களில் உள்ள பழங்களை அகற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது பண்ணை நிர்வாகம்.


மேட்டுப்பாளையம்: பலாப்பழங்களை தேடி கல்லார் அரசு பழப் பண்ணையை காட்டு யானைகள் முற்றுகையிட்டு மரங்களை சாய்க்க துவங்கியுள்ளதால் மரங்களில் உள்ள பழங்களை அகற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது பண்ணை நிர்வாகம்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழமையான பழப் பண்ணை உள்ளது. நீலகிரி மலைக்காட்டின் அடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் பகுதியில் ஆண்டு முழுவதும் நிலவும் சீரான சீதோஷன நிலை காரணமாக அந்த பழப் பண்ணையில் துரியன் பழம், முட்டைப்பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல அரிய வகை பழங்கள் ஏராளமாக விளைந்து வருகின்றன.

தற்போது பலா சீசன் துவங்கியுள்ள நிலையில் அங்குள்ள உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட பலா மரங்களில் பலாப்பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.

மேலும், அவை பழுக்கத் தொடங்கியுள்ளதால், அதில் இருந்து வீசும் வாசனையால் ஈர்க்கப்பட்டு காட்டு யானைகள் பண்ணையை முற்றுகையிட தொடங்கியுள்ளன. இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட கம்பி வேலிகளை துண்டித்துவிட்டு பண்ணைக்குள் நுழையும் யானைகள் மரங்களில் உள்ள பலாப்பழங்களை பறித்து உண்ணுகின்றன.

உயரமாக வளரும் தன்மையுள்ள பலா மரங்களில் பழங்களை தனது துதிக்கையால் பறிக்க இயலாவிட்டால், மரங்களை சாய்த்து விட்டு அதில் உள்ள பழங்களை ருசிக்கத் தொடங்கிவிடுகின்றன காட்டு யானைகள்.

மேலும், பண்ணையைச் சுற்றியுள்ள வனத்தில் இருந்து வரும் குரங்கு கூட்டங்கள் அங்கேயே முகாமிட்டு பலாப்பழங்களை கடித்து சேதப்படுத்துகின்றன. யானை மற்றும் குரங்குகளால் பலா மரங்கள் மட்டுமின்றி அங்கு வளர்க்கப்பட்டு வரும் பிற வகை அரிய வகை மரங்களும், செடிகளும், விற்பனைக்காக தயாராகும் மூலிகை மற்றும் மலர் நாற்றுக்களும் சேதமடைந்து வருகின்றன. மேலும், அப்பண்ணையை பார்வையிட சுற்றுலாப் பயணிகளும் வருவதால், வனத்துறையினரின் ஆலோசனைப்படி பண்ணையில் உள்ள பலா மரங்களில் இருந்து பழங்களை அகற்றும் பணியை பண்ணை நிர்வாகம் துவங்கியுள்ளது.



இதற்காக கல்லார் பழப் பண்ணையில் பழுக்கும் நிலையில் உள்ள பலாக்களை பறித்து விற்பனை செய்துகொள்ள முதல் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது, மரங்களில் இருந்து பழங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...