தமிழ்நாடே தண்ணீருக்கு போராடுது..! கோவையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகுது..!

கோவை: கோவையை அடுத்த விளாங்குறிச்சி - சத்தி சாலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: கோவையை அடுத்த விளாங்குறிச்சி - சத்தி சாலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களுக்கு மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சரவணம்பட்டி அருகே உள்ள விளாங்குறிச்சி பஞ்சாயத்துக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணையின் தண்ணீர் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விளாங்குறிச்சி - சத்தி சாலை வழியாக நீர் வீணாகி வருகிறது.



அந்த வழித்தடத்தில் செல்லும் குடிநீர் குழாய் சாலைக்கு அருகில் 3 முதல் 5 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ளது தற்போது அதில் உடைப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.சதீஷ் குமார் கூறுகையில், "15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சாலையில் வீணாகிறது. கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த சூழ்நிலையில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இப்படியே தொடர்ந்தால் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு வரும். அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பைச் சரி செய்ய வேண்டும்." என்றார்.

அந்த பகுதியை கடந்து செல்லலும் வாகனங்கள், சாலையில் தேங்கிக் கிடக்கும் நீரை, நடந்து செல்வோர் மீது வாரி இறைத்துச் செல்வதாகவும், அவ்வப்போது சிறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கொந்தளிக்கின்றனர் அப்பகுதி மக்கள். 

இந்த நிலையில், குடிநீர் வீணாகி வருவதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக "15 நாட்களாக குடிநீர் வீணாகச் செல்கிறது. நடவடிக்கை எடுக்காத அரசுக்கு இது அவமானம்" என்ற பதாகை ஒன்று அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.



சமூக ஆர்வலர் அருள்ராஜ் கூறுகையில், "குடிநீரை வீணாக்கக் கூடாது என்று அறிவுரை கூறும் அரசு சாலைகளில் குடிநீரை விணாகிக் கொண்டிருக்கிறது. பழுது ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், அதனை விரைந்து சரிப்படுத்த வேண்டும். அதிகாரிகளின் அலட்சியத்தால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவது வேதனையளிக்கிறது." என்றார்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளர் ராதா கூறுகையில், "இது முக்கியமான பிரச்சினை, மின்தடை நாளன்று தான் இதனை முழுவதுமாக சரி செய்ய முடியும். மற்ற நாட்களில் சரி செய்ய முயற்சி மேற்கொண்டால், பிற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைப்படும். ஆகவே, மின் தடையன்று இப்பணியை மேற்கொண்டு விரைந்து தீர்வு காணப்படும்." என்றார்.



இன்று தமிழகமே தண்ணீருக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், குடிநீர் வீணாகிவருவது போது மக்களிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...