கோவை ஏ.டி.எம் மையங்களில் தொழில்நுட்ப கருவிகளை பொருத்தி தகவல்களை திருட முயற்சி

கோவை: கோவையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏ.டி.எம்-களில் ஸ்கிம்மர் கருவிகள் மற்றும் காமிராக்களை பொருத்தி தகவல்களை திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: கோவையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏ.டி.எம்-களில் ஸ்கிம்மர் கருவிகள் மற்றும் காமிராக்களை பொருத்தி தகவல்களை திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் இராமநாதபுரம் பகுதியில் உள்ள பங்கு சந்தை அலுவலகம் அருகில் ஒரு தேசிய வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க சென்ற நபர் ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில் செலுத்தினார். அப்போது, இயந்திரத்தில் இருந்த கருவி கழன்று வெளியே விழுந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கழன்று விழுந்த அந்த கருவி டெபிட் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடும் ஸ்கிம்மர் கருவி என்று தெரியவந்தது. அதேபோல் பின் நம்பர் பதிவு செய்யும் இடத்தில் ஒரு சிறிய காமிரா பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அதனைப் பொருத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.



இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள வங்கி கண்காணிப்பு காமிராவில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்திய ஆசாமிகளின் முகம் பதிவாகியுள்ளது. அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



ஏ.டி.எம் மையங்களை கண்காணிக்குமாறு வங்கி அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்துள்ளோம். ஆனால் பணத்தை நிரப்புவதோடு சரி, அதன் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து வங்கி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்கள் முறையாக ஆய்வு செய்வதும் இல்லை. இதனால், பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகியுள்ளது.

இதேபோல, கிராஸ்கட் சாலை, பீளமேடு ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத ஏ.டி.எம்.களை குறிவைத்து மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் கருவிகள் பொருத்தியிருந்தது தெரியவந்தது. அவற்றை பொருத்திய ஆசாமிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...