ஹால்மார்க் முத்திரைகள் கொண்ட நகைகளை வாங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்

கோவை: அட்சய திருதியை முன்னிட்டு நகைகளை வாங்க வாங்குபவர்கள் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை வாங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: அட்சய திருதியை முன்னிட்டு நகைகளை வாங்க வாங்குபவர்கள் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை வாங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் புதன்கிழமை அட்சய திருதியை தினம் வருகிறது. அன்றைய நாளில் தங்க நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை காரணமாக பெரும்பாலானோர் நகை வாங்குவது வழக்கம். இந்நிலையில், பொதுமக்கள் உரிய அங்கீகாரம் பெற்ற நகைக்கடைகளுக்கு சென்று தரச்சான்று பெற்ற நகைகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய தரச்சான்று நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக, இந்திய தரச்சான்று நிறுவனத்தின் கோவை மாவட்ட தலைமை அதிகாரி கலைவாணன் கூறுகையில், "பி.ஐ.எஸ் (BIS) நிறுவனத்திடம் தரச்சான்று பெற்ற நகைகடையை தரச்சான்றுடன் கூடிய பலகையை வைத்து உரிய அங்கீகாரம் பெற்ற நகைக் கடையா என நாம் கண்டறியலாம். ஒவ்வொரு நகைக்கும் 4 சான்றுகள் தரப்படும். நான்கு சான்றுகளும் இருக்கும் நகைகளைத் தான் ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளாகும். இதில் ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை தான் விற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் பெரும்பாலான நகைக் கடைகளில் தரக்குறைவான தங்கம் விற்கப்படுப்படுகிறது.

ஹால்மார்க் முத்திரையை நகைக்கடைகள் தவறான முறையில் பயன்படுத்தினால், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், 1 வருடம் வரை சிறை தண்டனைக் கிடைக்கும். 4 முத்திரைகளும் வாங்கும் நகைகளில் இருக்கிறதா என வாடிக்கையாளர்கள் சோதித்து பார்த்து வாங்க வேண்டும்," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...