கோவை மார்க்கமாக இயங்கும் ரயில்களின் சேவையில் இன்று முதல் மாற்றம்

கோவை: போடிநாயக்கன்பட்டியைச் சேலம் நகரத்துடன் இணைக்கும் தரைக்கீழ்ப்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் 20-ம் தேதி வரை இயங்கும் ரயில்கள் தாமதமாக இயங்கும் என சேலம் தெற்க ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை: போடிநாயக்கன்பட்டியைச் சேலம் நகரத்துடன் இணைக்கும் தரைக்கீழ்ப்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் 20-ம் தேதி வரை இயங்கும் ரயில்கள் தாமதமாக இயங்கும் என சேலம் தெற்க ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போது, போடிநாயக்கன்பட்டியில் வசிக்கும் சுமார் 500 குடும்பத்தினர் பயன்பெறும் வகையிலும், போடிநாயக்கன்பட்டியைச் சேலம் நகரத்துடன் இணைக்கும் பொருட்டும், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் ஆகியோர் ஒத்துழைப்புடன் பெரிய தரைக்கீழ்ப்பாலத்தை கட்டுவதற்கான பணிகளை இன்று முதல் துவக்க ஆணை பிறப்பித்துள்ளார். இந்தப் பெரிய அளவிலான மெகா பிளாக் என்றழைக்கப்படும் பணிகளால், பயணிகள் ரயில்களின் இயக்கம் இன்று (ஏப்.,16) முதல் வரும் 20-ம் தேதிவரை பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சரக்கு ரயில்களின் இயக்கம் 15, 16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் முழுமையாக நிறுத்தப்படும்.

4.5 மீ அகலம், 3.65 மீ உயரம் மற்றும் 1.53 மீ நீளம் கொண்ட 26 கான்கிரீட் கூடுகள் செய்யப்பட்டு, ரயில்தடத்தின் கீழ் நிறுவப்பட உள்ளன. இப்பணிகள் நடைபெறுவதன் மூலம் சுமார் 50 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த போடிநாயக்கன்பட்டி வாசிகளின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு, அப்பகுதியை சேலம் நகரத்துடன் இணைக்க உதவும். இந்த தரைக்கீழ்ப்பாலப்பணிகள் சுமார் ரூ. 2.83 கோடி திட்ட மதிப்பீட்டில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி. வெங்கடாசலம், தமிழக அரசு மற்றும் சேலம் மாநகராட்சியின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...