நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும்: காவல் துறை எச்சரிக்கை

கோவை: நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை: நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நொய்யலில் மணல் அள்ளக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது.



நொய்யல் பாதுகாப்பு குழுவினர் ஒருங்கிணைத்த இந்த கூட்டம் மாதவராயபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த கூடத்தில் மதவராயபுரம், ஆலந்துறை, தொம்பிளிபளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.



அப்போது பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் பேசுகையில், "நொய்யலில் இருந்து சட்ட விரோதமாக மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை பாயும். கழுதை, மாட்டுவண்டி போன்றவை மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி நொய்யல் ஆற்றுப்படுகையில் இரவு நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும், அந்த பகுதி இளைஞர்களும் போலீசாருக்கு உதவி செய்ய உள்ளனர்." என்றார்.



Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...