ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியை மீட்டெடுத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவை: கோவையில் ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி சுயநினைவை இழந்த முதியவர் ஒருவர், கை மற்றும் முகத்தில் காயங்களுடன் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை அந்த முதியவரை மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றது. தொடர்ந்து, அவரிடம் இருந்த ஆவணங்களைச் சோதித்து பார்த்ததில் அவர் டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மன் (87) என்பதும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் தெரியவந்தது. அந்த முன்னாள் அதிகாரியை அவரது குடும்பத்திற்கு மீட்டுக் கொடுத்துள்ளது ஈர நெஞ்சம் அறக்கட்டளை.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி சுயநினைவை இழந்த முதியவர் ஒருவர், கை மற்றும் முகத்தில் காயங்களுடன் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை அந்த முதியவரை மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றது. தொடர்ந்து, அவரிடம் இருந்த ஆவணங்களைச் சோதித்து பார்த்ததில் அவர் டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மன் (87) என்பதும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் தெரியவந்தது. அந்த முன்னாள் அதிகாரியை அவரது குடும்பத்திற்கு மீட்டுக் கொடுத்துள்ளது ஈர நெஞ்சம் அறக்கட்டளை.

இது குறித்து ஈர நெஞ்சம் மகேந்திரன் கூறுகையில், " மேட்டுப்பாளையத்தில் உள்ள முதியோருக்கான தாங்கும் விடுதி ஒன்றில் லக்ஷ்மன் இருந்துள்ளார். டெல்லி செல்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்த போது அவர் வழி தவறி சென்றிருக்கிறார். அவரை ரயில் நிலைய காவலர்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தோம். தொடர்ந்து, அவரது கைப்பையில் இருந்த துண்டு சீட்டுகளைப் பார்த்த போது அவரது மகள் கலா டெல்லியில் இருப்பது தெரியவந்தது. அவருக்குத் தகவல் கொடுத்தோம். கோவை வந்த அவர், தனது தந்தை ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், அவரை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றியையும் தெரிவித்தார். பின்னர், அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பி வைத்தோம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, தற்போது வரை ஆதரவின்றி இருந்த முதியோர்கள் சுமார் 35 பேரை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடையே ஒப்படைத்துள்ளோம்." என்றார்.

முதியவரை மீட்டு குடும்பத்திடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் மகேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...