கோடை சுற்றுலா : பைக்காரா படகு இல்லத்தின் சிறப்புகள்

நீலகிரி : கோடைக்காலம் தொடங்கி விட்டதால், சமவெளி பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியான பகுதிகளுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். மேலும், ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள், கோடை விடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி உதகைக்குப் புறப்பட்டு விடுவார்கள்.


நீலகிரி : கோடைக்காலம் தொடங்கி விட்டதால், சமவெளி பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியான பகுதிகளுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். மேலும், ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள், கோடை விடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி உதகைக்குப் புறப்பட்டு விடுவார்கள். 

சரி..! அப்படி, உதகைக்கு செல்பவர்கள் எந்தெந்தப் பகுதிகளுக்கு செல்லலாம். அந்தப் பகுதியின் சிறப்புகள் என்ன? என்பதை விளக்குவதற்காகத் தான் இந்த வாராந்திர கட்டுரை. 



நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா துறைக்கு சொந்தமான சுற்றுலா ஸ்தலங்களில் பைக்காரா படகு இல்லமும் ஒன்று. உதகை படகு இல்லத்திற்கு அடுத்தபடியாக பைக்கார படகு இல்லத்திற்கு படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா படகு இல்லம் உள்ளது. கூடலூர் செல்லும் சாலையின் இடதுபுறம் அருகே, வனப்பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்றால் பைக்காரா படகு இல்லத்திற்கு சென்றுவிடலாம். பைக்காரா படகு இல்லத்திற்கு செல்ல வேண்டுமானால் கூடலூரை நோக்கி பயணம் மேற்கொள்ளும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பயணிக்கலாம்.

வாகன பார்க்கிங் கட்டண விவரங்கள் :  

இரு சக்கர வாகனங்கள் ரூ. 5

நான்கு சக்கர வாகனங்கள் ரூ. 15

வேன் மற்றும் பெரிய ரக வாகனங்களுக்கு ரூ. 30 வசூலிக்கப்படுகிறது.



பைக்காரா படகு இல்லத்தில் 5 ஸ்பீடு படகுகள் உட்பட 23 படகுகள் உள்ளன. படகு சவாரி பயணக் கட்டணம் தொடர்பான விவரங்கள்.

    

8 பேர் கொண்ட இருக்கையில் பயணிக்க 20 நிமிடங்களுக்கு ரூ. 770-ம்

10 பேர் கொண்ட இருக்கையில் பயணிக்க 20 நிமிடங்களுக்கு ரூ. 890-ம்

15 பேர் கொண்ட இருக்கையில் பயணிக்க 20 நிமிடங்களுக்கு ரூ. 1,240 வசூலிக்கப்படுகிறது.



பைக்காரா படகு இல்லத்தின் சிறப்பம்சமே, ஸ்பீட் படகுதான். இதில், மூன்று பேர் கொண்ட இருக்கையில் 10 நிமிடங்களுக்கு ரூ. 800 வசூலிக்கப்படுகிறது. மேலும், படகு சவாரி செய்யும் போது சுயபுகை படமெடுக்க தடை என்பதைப் படகு இல்லத்தின் நுழைவாயிலிலும், படகு இல்லத்தின் பல்வேறு பகுதிகளிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...