41-வது வருடமாக சேவையை ஆற்றும் 'கோவை எக்ஸ்பிரஸ்'

கோவை : கோவை மக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கி வரும் 'கோவை எக்ஸ்பிரஸ் ரயில்' தனது 41-வது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

கோவை : கோவை மக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கி வரும் 'கோவை எக்ஸ்பிரஸ் ரயில்' தனது 41-வது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 

தெற்கு ரயில்வே சார்பில் முதல்முறையாக 1977-ம் ஆண்டு ஏப்.,14-ம் தேதி முதல் நாள்தோறும் இயங்கும் அதிவிரைவு ரயில் 'கோவை எக்ஸ்பிரஸ்' அறிமுகப்படுத்தப்பட்டது. 1980 காலகட்டங்களில் பிரபலமான ரயிலாக திகழ்ந்த இந்த ரயில், சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை ரயில்நிலையம் வரையில் நிறுத்தங்களின்றி இயக்கப்பட்டு வந்தது. நாளடைவில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் மற்றும் ஈரோடு போன்ற ரயில் நிறுத்தங்கள் உருவாக்கப்பட்டன. 

இந்த நிலையில், பல்வேறு சிறப்புகளைப் பெற்ற 'கோவை எக்ஸ்பிரஸ் ரயில்' தனது 41-வது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் பல்வேறு ரயில் எண்கள் மற்றும் நேரங்களில் இயக்கப்பட்ட இந்த ரயில், தற்போது 75/76 என்ற எண்களில் இருந்து 12675/12676 எண்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலே கூறியுள்ள ரயில் நிறுத்தங்களைத் தவிர்த்து, பெரம்பூர், மொரப்பூர், சேலம் மற்றும் திருப்பூர் போன்ற மேலும் பல நிறுத்தங்களில் நிறுத்தப்படுகின்றன.  



 

இது தொடர்பாக ரயில் பயணி சித்தார்த் அசோக் கூறுகையில், "கடந்த ஆண்டு கொண்டாட்டத்தின் ரயில் என்ஜின் ஓட்டுநர் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். ஆனால், இந்த ஆண்டு எந்தவொரு கொண்டாட்டமும் இல்லாதது, ஏமாற்றம் அளிக்கிறது," என்றார். 

நாள்தோறும் அடிப்படையில் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து அதிகாலை 06.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 01.45 மணிக்க வந்தடையும். அன்று மதியமே 02.55 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில், சென்னை சென்ட்ரலுக்கு இரவு 10.35-க்கு சென்றடையும். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...