நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மொபைல் செயலி அறிமுகம்

கோவை : நீரிழிவு நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான சிகிச்சை முறைகள் அடங்கிய பிரத்யேக செயலி கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை : நீரிழிவு நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான சிகிச்சை முறைகள் அடங்கிய பிரத்யேக செயலி கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நீரிழிவு, தைராய்டு மற்றும் உட்சுரப்பிகள் துறை மற்றும் கோவை ஆப்ஸ்டெடிக்ஸ் கைனே சொசைட்டி. இணைந்து 4-வது நீரிழிவு மற்றும் சுரப்பிகளின் மாநாடு நடைபெற்றது. உலகளவில் பெருகி வரும் நோய்களில் முக்கியமான குழந்தைகளின் உடல்பருமனை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு, மருத்துவமுறை குறித்து ஆலோசனை நடத்தினர்.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, அதிகளவு குழந்தைகள் பாதிக்கும் நீரிழிவு நோய் மற்றும் அவற்றின் சிகிச்சை முறைகள் அடங்கிய பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த மாநாடு தொடர்பாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நீரிழிவு, தைராய்டு மற்றும் உட்சுரப்பிகள் துறையைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் தாமோதரன் கூறுகையில், "நீரிழிவு நோய் குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த செய்ய வேண்டும். உணவு திட்டமிடல், உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வதன் அவசியத்தை தெரிந்து கொள்ள வகை செய்ய வேண்டும்," என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...