எடப்பாடி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் : ஜவஹிருல்லா

கோவை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை கைதியை ஜாமினில் விட மறுக்கும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கோவை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை கைதியை ஜாமினில் விட மறுக்கும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்க வந்த மனித அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது :- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதுவரை யாரையும் தமிழக அரசு விடுவிக்கவில்லை. கோவை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் இதுவரை 4 ஆயுள் தண்டனை கைதிகள் உயிரிழந்துள்ளனர். கோவை சிறையில் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள அபிதாகீருக்கு நிரந்தரமாக பரோல் கொடுக்க வேண்டும் அல்லது அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அபுதாகீரை தமிழக அரசு வெளியே விடாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். ஒரு மாத பாரோலுக்கு பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறை கைதி அபுதாகீருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பாகும். மேலும், சட்ட ஆலோசனைப் பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்.காஷ்மீர் சிறுமி படுகொலையில் சங்பரிவார் அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்திலும் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். இது இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்களைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும், எனத் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...