தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் எச். ராஜா தேசவிரோதி : சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

திருப்பூர் : தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் பா.ஜ.க.,வின் எச். ராஜாதான் தேசவிரோதி என திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர் : தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் பா.ஜ.க.,வின் எச். ராஜாதான் தேசவிரோதி என திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் கொண்டாடி வரும் வேளையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்ட வழக்கில் திருத்தம் மேற்கொள்வது வருத்தமளிக்கிறது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து வரும் 25-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். 



காவிரி விவகாரத்தில் போராடும் அனைவரும் தேசவிரோதிதான் எனக் கூறிய எச். ராஜாதான் தேசவிரோதி. தொடர்ந்து, தமிழகத்திற்கு எதிராகப் பேசி வருகிறார். இவ்வாறு பேசியும் தமிழகத்தில் சகஜமாக நடமாட விட்டிருக்கும் அளவுக்கு தமிழர்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கிறார்கள். காவிரி பிரச்சினைக்காகப் போராடுவதன் காரணமாக, நாங்கள் தேசவிரோதிகள் என்றால் அப்படியே இருந்துவிட்டு போகிறோம். அ.தி.மு.க.,தான் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது. அ.தி.மு.க., அரசால் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கூட பெற முடியவில்லை.



காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியதை தவிர்த்திருக்கலாம் என ஆளுநரும் தெரிவித்தார். ஆனால், கருப்புக்கொடி காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம் என தெரிவித்தோம். மேலும், நாங்கள் ஐ.பி.எல்., விளையாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழகம் போராட்டக்களமாக இருக்கும் நிலையில், அதனை சில நாட்கள் சென்னையில் நடத்த வேண்டாம் என்றே கோரிக்கை வைத்தோம். காவிரி விவகாரத்தில் உயர் அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராடுவோம். அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து 16 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும்." என்றார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா  சிலை முன்பு புரட்சியாளர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நகர மற்றும் ஒன்றிய பகுதிகளான அண்ணாசிலை அருகில்,பேருந்து நிலையம், ஐந்துமுக்கு, நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட 13 இடங்களில் விடுதலை சிறுத்தையின் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகை மலை ரயில் நிலையத்தில் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு, உதகை மலை ரயில் நிலையத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. 



இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட தாட்கோ மேலாளர் தி. ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உதகை மலை ரயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...