தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட காட்டூர் மாரியம்மன்

கோவை : தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் காட்டூர் மாரியம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

கோவை : தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் காட்டூர் மாரியம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. 

சித்திரை திருநாளை தமிழர்கள் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் வருடமான விளம்பி வருடம் முதல் நாளான இன்று புத்தாண்டை கொண்டாடும் விதமாக கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, காட்டுர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரு. 5 கோடி மதிப்பிலான புதிய ரூ. 2000, ரூ. 500, ரூ. 200 மற்றும் ரூ. 50 நோட்டுக்களை கொண்டும், ரு. 3 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வைரக் கற்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரப் பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் வருடம் முழுவதும் செல்வ செழிப்புடனும், வளமாகவும் அமையும் என மக்களால் நம்பப்படுகிறது. இதனால், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக புதிய ரூ. 1 நோட்டு அன்பளிப்பும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இதேபோல, ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகருக்குத் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மா, பலா, வாழை, எலுமிச்சை, கொய்யா, மாதுளம் பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களைக் கொண்டும், பூக்களை கொண்டும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலான வீடுகளில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோலமிட்டும், புத்தாடை அணிந்தும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...